ராஞ்சி, பிப். 18 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான வரைவு அறிக்கையை தயார்செய்ய அந்த மாநில முதல்வர் சம்பாய் சோரன் உத்தர விட்டுள்ளார்.
இதுதொடர்பாக பணியாளர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் சம்பாய் சோரன், “விரைவில் வரைவு அறிக்கை தயாரிக் கப்பட்டு மாநில அமைச்ச ரவையின் ஒப்புதல் பெறப் படும். அண்டை மாநிலமான பீகாரில் மேற்கொள்ளப் பட்ட அதே முறையில் சாதி வாரி மக்கள்தொகைக் கணக் கெடுப்பு நடத்தப்படும். அனைத்தும் திட்டமிட்ட படி நடந்தால், மக்கள வைத் தேர்தலுக்கு பின், கணக் கெடுப்புக்கான பணி தொட ங்கும்’ என தெரிவித்துள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப் பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதுபற்றி மோடி அரசு வாய்திறக்க மறுத்து வருகிறது.
எனினும், பீகார், கர்நாடகா, ஆந்திரா, தெலுங் கானா வரிசையில் ஜார்க் கண்டும் மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.